Tuesday, April 12, 2016

மனிதன்

                      நியண்டர்தால் மனிதன்

நியண்டர்தால் (NeanderthalHomo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது. முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது. 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது.
நியண்டர்தால் மமனிதனின் மாதிரி உருவம்
நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பைபயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான்.

கருவிகள்

தென்மேற்கு பிரான்சில் 50,000 ஆண்டு பழமை வாய்ந்த பெச்சுடியாசிசு (Pech-de-l’Azé I)தளத்தில் கண்டறியப்பட்ட மாங்கனீசு ஈர் ஆக்சைடு கற்கள் நியண்டர்தால் மனிதர்கள்வேதியியல் அறிவுபெற்று நெருப்பை உண்டாக்கியிருக்கிறார்கள் என நிறுவுகிறது.

                  90px      Homo sapiens neanderthalensis.jpg            

                                                                   பலாங்கொடை மனிதன்                                                                                               

இற்றைக்குக் கிட்டத்தட்ட 300,000 முதல் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஓமோ எரெக்டசு (home erectus) மனித இனம் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணக் கிடைக்கின்றன. இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மனிதர்கள் இலங்கையில் வாழ்ந்தமைக்கான உறுதியான சான்றுகளும் உள்ளன.
இலங்கையிற் காணக் கிடைத்துள்ள புது மனிதனின் எச்சங்கள் இலங்கையில் நிலவிய இரண்டாம் கற்காலத்திற்குரிய, அஃதாவது பொதுக் காலத்துக்கு முன் 1000 ஆண்டுகளுக்கு முன் இரும்புக் காலம் தொடங்குவதற்கு முற்பட்ட பண்பாட்டுக்குரியனவாகும். இந்த இடைக் கற்காலப் பண்பாடு "பலாங்கொடை நாகரிகம்" எனப்பட்டது.
நன்கு வளர்ச்சியடைந்த பலாங்கொடை மனிதரில் ஆணின் உயரம் 174 செமீ எனவும் பெண்ணின் உயரம் 166 செமீ எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை மனிதனின் எலும்புகள் மிக உறுதியானவையாகவும், மண்டையோடு தடித்ததாகவும், விலா எலும்புகள் நன்கு வளைந்தனவாயும், மூக்கு உட்குழிவானதாயும், விரலெலும்புகள் பருமனானவையாயும், கழுத்து சிறியதாயும் இருந்துள்ளன.
பலாங்கொடை மனிதனின் கற்கருவிகள் மிகச் சிறியனவாகவும், கிட்டத்தட்ட 4 செமீ அளவான கூரிய படிகங்களால் ஆனவையாகவும் மும்மூலை வடிவங்களாகவும் காணப்பட்டன. இவ்வாறான கற்கருவிகளே ஐரோப்பாவில் முதலில் விவரிக்கப்பட்ட படி, முதற் கற்காலத்திலும் பயன்படுத்தப்பட்டவையாகும். ஐரோப்பாவிற் காணப்பட்ட முதற் கற்கருவிகள் இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாயிருக்க, இலங்கையிற் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளின் காலம் பட்டதொம்பலென என்னுமிடத்திற் காணப்பட்டவை 31,000 ஆண்டுகளுக்கும், பூந்தலவுக்கு அருகில் அமைந்துள்ள கரையோரப் பகுதிகள் இரண்டிற் காணப்பட்டவை 28,000 ஆண்டுகளுக்கும், பெலிலென குகையிற் காணப்பட்டவை 30,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டிருப்பது அதிசயமானதாகும்

வேளாண்மை

பலாங்கொடை மனிதனே இலங்கையின் நடு மலைநாட்டில் வேட்டையாடுவதை எளிதாக்குவதற்காக மரங்களை எரித்து ஓட்டன் சமவெளியைஉருவாக்கினான் எனக் கருதப்படுகிறது. எனினும், ஓட்டன் சமவெளியிற் கண்டெடுக்கப்பட்டனவான பொதுக்காலத்துக்கு 15,000 ஆண்டுகளுக்கு முந்தியபுல்லரிசி மற்றும் வாற்கோதுமை என்பன, பலாங்கொடை மனிதன் வேளாண்மையிலும் ஈடுபட்டானெனக் கருதச் செய்கின்றன.

நில்கல குகை மற்றும் பெல்லன்பந்தி பலசுச என்னுமிடங்களிற் காணப்பட்ட பொதுக் காலத்துக்கு 4500 ஆண்டுகளுக்கு முந்தியனவான நாய் எலும்புக்கூட்டு எச்சங்கள், பலாங்கொடை மனிதன் வேட்டைக்காக நாய்களைப் பயன்படுத்தினான் என்ற கருத்தை ஏற்படுத்துகின்றன. இலங்கையின் நாயினங்கள் தமக்குப் பொதுவான வரலாற்றுக்கு முந்திய முன்னோரைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மேலும் காட்டுக்கோழி, பன்றி, நீரெருமை,மாடு போன்றவற்றையும் பலாங்கொடை மனிதன் பழக்கி வளர்த்தான் எனக் கருதப்படுகிறது.               


                        பீக்கிங் மனிதன்

பீக்கிங் மனிதன் 250,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த மனிதன். இவன் முழுவளர்ச்சியடையாத மனிதக்குரங்கு மனிதன். 1929 இல் பீக்கிங் மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் சீனாவின் பீக்கிங் நகரருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனாலேயே இம்மனிதனுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது.
பீக்கிங் மனிதர்கள் கல்லாயுதங்களைப் பயன்படுத்தினர். நெருப்பின் பயனை அறந்திருந்தனர்.

Friday, April 8, 2016

CELLS WITH TAMIL EXPLAIN

                                   உயிரணு-செல் 




மாதிரி தாவர உயிரணுவின் உள்ளுறுப்புகள்:
உயிரணுஎன்பது உயிரினங்கள் அனைத்துக்கும் அடிப்படை கட்டமைப்பு, தொழிற்பாட்டு அலகு ஆகும். அனைத்து உயிர்களும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயிரணுக்களின் கூட்டினால் உருவானவை. உயிரினங்களாக வகைப்படுத்தப்படுபவற்றில் காணப்படும் மிகச் சிறிய அலகாக இருக்கும் இந்த உயிரிணுக்களை உயிரினங்களின் கட்டடத் தொகுதிகள் எனலாம்[1]. தமிழில் உயிரணுவை செல், கலம், கண்ணறை, திசுள் என்றும் குறிப்பிடுவர். விலங்குகள், தாவரங்களில் உள்ள கலங்கள் 1 தொடக்கம் 100 µm வரை வேறுபடுவதனால், அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. எனவே அவற்றைப் பார்க்கநுணுக்குக்காட்டி தேவைப்படுகின்றது[2]. உயிரணுக்கள் குறைந்த பட்சம் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகியிருக்கும் என அறியப்படுகின்றது[3][4][5]
தனியொரு உயிரணுவினால் ஆன உயிரினங்களாக பாக்டீரியாஆர்க்கீயா போன்ற நுண்ணுயிர்களை உள்ளடக்கிய நிலைக்கருவிலிகளையும், அநேகமான அதிநுண்ணுயிரிகளையும், ஒரு சில பூஞ்சைஇனங்களையும் குறிப்பிடலாம். மனிதன் போன்ற விலங்குகள், தாவரங்கள், அநேகமான பூஞ்சைகள் பல்லுயிரணுவுள்ள உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள். விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து,தாவரங்களின் உயிரணுக்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆண்பெண் வேறுபாடுடைய உயிரினங்களில் பாலணுக்கள் இணந்து உருவாகும் முதலாவது உயிரணு கருவணு (Zygote) என அழைக்கப்படுகிறது.
மனிதரில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான சூலகத்தில் இருந்து வெளியேறும் சூல் முட்டையுடன், ஆணின் விந்து இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு, அதாவது கருவணு மீண்டும் மீண்டும் கலப்பிரிவுக்குள்ளாகி, பிரதி செய்யப்பட்டு கோடிக்கணக்கான கூட்டுக் கலங்களாகிகுழந்தையாக உருப்பெறுகிறது.

வரலாறு

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உயிரணுக்கொள்கை உருவாக்கப்பட்டது. இக் கொள்கை உருவாக்கத்தின் போதும் கூட அதன் வடிவத்தை ஆராயும் நுண்நோக்கி இருக்கவில்லை. மேலும் பல்லாயிரம் மடங்கு பெரிதாக்கிக்காட்டும் திறம் கொண்ட நுண்ணோக்கிகள் வந்த தற்காலத்திலும் பல்வேறு வேதிப்பொருள்களின் துணையுடனும், கணிப்பீட்டுக் கணிதவியல் துறைகளின் உதவியுடனுமே உயிரணுவின் கட்டமைப்பு மாந்தர் கண் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு காரணங்களாக உயிரணுக்கள் மனிதக்கண்ணின் பார்வைப்புலத்தினை விடவும் ஐந்து மடங்கு சிறியளவான 10 முதல் 20 மைக்ரோமீட்டர் (1000 μm= 1mm) விட்டம் கொண்டதாக காணப்படுவதையும், ஒளியூடுமை (ஒளியை ஊடுபுக விடும் தன்மை) கொண்டிருப்பதையும் குறிப்பிடலாம்.

உயிரணுக் கொள்கையின் முக்கிய கூறுகள்

உயிரணுக்கொள்கையானது அதன் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, கூடிய தகவல்களை ஏற்றுக்கொண்டு, மாறி வந்திருக்கின்றது. நவீன கொள்கையின்படி:
  • அனைத்து உயிர்களும் உயிரணுக்களால் ஆனவை.
  • உயிரினங்களின் கட்டைமைப்பினதும், தொழிற்பாட்டினதும் அடிப்படை அலகு உயிரணு ஆகும்.
  • உயிரணுப் பிரதலினால் ஒரு உயிரணுவில் இருந்து இன்னொன்று உருவாகின்றது.
  • ஆற்றலை உருவாக்கும் உயிர்வேதியியல் செயற்பாடான வளர்சிதைமாற்றமானதுஉயிரணுக்களின் உள்ளேயே நடைபெறுகின்றது.
  • உயிரணுக்கள் பரம்பரைத் தகவலை (டி.என்.ஏ) கொண்டிருக்கிறது. இது உயிரணுக்களின் பிரிவின் போது, தாய் உயிரணுவிலிருந்து பிரிந்து வரும் மகள் உயிரணுக்களிற்கு கடத்தப்படுகிறது.
  • அனைத்து உயிரணுக்களும் அடிப்படையில் ஒரே வேதியியல் அமைப்பைக் கொண்டுள்ளன.
  • சில உயிரினங்கள் தனிக்கலத்தாலான (unicellular) உயிரினங்கள் ஆகும். அதாவது ஒரே ஒரு உயிரணுவினால் உருவாக்கப்பட்டவை (ஒரு கலவுயிரி).
  • மற்றயவை பல்கல (multi-cellular) உயிரினங்கள். அதாவது பல உயிரணுக்களினால் ஆனவை. இவை பல்கலவுயிரி எனப்படும்.
  • ஒரு உயிரினத்தின் தொழிற்பாடானது, அவ்வுயிரினத்தில் காணப்படும் ஒவ்வொரு தனித்தியங்கும் உயிரணுக்களினதும் மொத்த தொழிற்பாட்டில் தங்கியுள்ளது.

உயிரணுவின் அமைப்பு

ஒவ்வொரு உயிரணுவும் மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளன.
  1. உயிரணு மென்சவ்வு (Cell Membrane) - வெளியுறை
  2. குழியுருவு (Cytoplasm) - பாய்பொருள்
  3. கரு - உயிரணுவின் கட்டுப்பாட்டு மையம். (மரபுத்தகவல்கள் அடங்கியுள்ள பகுதி)
என மூன்று பெரும் பிரிவுகளும் அதற்குள் ஏராளமான சிறு சிறு மேடுகள், பள்ளங்கள், துளைகள் என்பவைகளையும், உட்பகுதிக்குள் வளைந்து நெளிந்தும், சுருண்டும் செல்லும் அமைப்புகள், மற்றும் வெளிப்புறமாக நீண்டு செல்லும் பகுதிகள் என மிக மிக சிக்கலான அமைப்புகளை இத்தலைப்புகளை ஆழ ஆராயும் போது உப தலைப்புகளாக கொண்டு வரலாம். பிரபலமான டி.என்.ஏ எனும் சொற்பதமும் உயிரணுவின் கருவை (Nucleus) ஆழமாக ஆராயும் போதே அறிமுகமாகிறது. இதனூடாகவே மரபுத் தகவல்களும் கடத்தப்படுகிறது.
உயிரணுக்களின் கட்டமைப்பு உயிரினங்களின் வகைக்கு அமைய பல வேறுபாடுகளைக் காட்டுகின்றது. நிலைக்கருவிலிகள் மற்றும்மெய்க்கருவுயிரிகளின் கலங்களுக்கிடையே காணப்படும் வித்தியாசங்களின் சுருக்கம் பின்வருமாறு
Table 1: நிலைக்கருவிலி, மெய்க்கருவுயிரி உயிரணுக்களுக்கிடையிலான ஒப்பீடு
நிலைக்கருவிலிகள்மெய்க்கருவுயிரிகள்
உதாரணங்கள்பக்டீரியாஆர்க்கியாஅதிநுண்ணுயிரிகள்பங்கசுதாவரங்கள்விலங்குகள்
சராசரிப் பருமன்~ 1–5 µm~ 10–100 µm
கருவின் வகைபோலிக் கருவே காணப்படும்; உண்மையான கரு இல்லைஇரட்டை மென்சவ்வினால் சூழப்பட்ட உண்மையான கருவைக் கொண்டது
DNAபொதுவாக வட்ட வடிவமானது.நீண்ட நேரான இழைகளாலானது. இவை இசுட்டோன் புரதத்துடன் சேர்ந்து, தமக்குள் சுருண்டு, வளநிது பொதி செய்யப்பட்டு, நிறமூர்த்தங்களாகக்காணப்படும்.
ஆர்.என்.ஏ / புரத உற்பத்திஇரண்டும் இணைந்து குழியவுருக்குள் காணப்படும்கருவில் ஆர்.என்.ஏ தொகுக்கப்பட்டு, குழியவுருவுக்குக் கடத்தப்பட்டு, பின்னர் குழியவுருவில் புரதம் உற்பத்தியாக்கப்படுகின்றது.
இரைபோசோம்வகைகள்50S மற்றும் 30S60S மற்றும் 40S
குழியவுருக் கட்டமைப்புசிறிய எண்ணிக்கையிலான கட்டமைப்புக்கள் காணப்படும்.பல மென்சவ்வினாலான கட்டமைப்புக்களையும், குழியவுரு வன்கூட்டுக் கட்டமைப்பையும் கொண்டது.
கல அசைவுகசையிழைப்புரதத்தினால் (Flagellin) ஆக்கப்பட்டகசையிழை அல்லது நகரிழை மூலம் கல அசைவு நடைபெறும்.கசையிழை, பிசிர் (Cilium) போன்ற பல வழிகளால் கல அசைவு நடைபெறும்.
இழைமணிஇல்லைஒன்று தொடக்கம் பல ஆயிரம் காணப்படலாம் (சிலவற்றில் காணப்படாது)
பச்சையவுருமணிஇல்லைஅல்காக்களிலும் தாவரங்களிலும் உள்ளது
ஒழுங்கமைப்புதனிக்கல அங்கிகள்தனிக்கல மற்றும் பல்கல அங்கிகளாக உள்ளன
கலப்பிரிவுசாதாரண எளிமையான இரட்டைப் பிரிவு கலப்பிரிவு (Fission) நிகழும்.இழையுருப்பிரிவு
ஒடுக்கற்பிரிவு என இருவேறுபட்ட கலப்பிரிவு நிகழும்.

உயிரணுவின் தொழில்

தொடர்ந்தும் கலங்களை மீளமைத்தல், புரதங்களை உருவாக்கல், உயிர்ச்சத்துக்களை பிரித்தெடுத்தல் , தூண்டற்பேற்றை காட்டல் என ஓர் உயிரினம் உயிர் வாழத்தேவையான இன்னுமின்னும் முக்கியப்பணிகளும் இவ்வுயிரணுவின் உள்ளேயே இடம் பெறுகின்றன. ஒருவரின் பரம்பரை நோய்கள், குணங்கள் மற்றும் தோற்றங்கள் என்பதை குழந்தைகளுக்கு கடத்திச்செல்லவும் இக்கலத்தின் கருவே பயன்படுகிறது.
  • மூளைக்கலங்கள் - செய்திப் பரிமாற்றம்
  • தசைக்கலங்கள் - இயக்கம்
  • குடற்கலங்கள் - செமிபாடு 
  • நாவுக்கலங்கள் - சுவை

ஆய்வுகள்

இது குறித்த ஆய்வுகள் உயிரணுவியல் (Cell Biology) என அழைக்கப்படுகிறது. 50 வருடங்களுக்கு முன்னரே "உயிரியலில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உயிரணுவியல் பற்றிய ஆய்வு தீர்வு தரும்" என நம்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்று வரை "உயிரணுவியல்" உயிரியலின் பெரும் பகுதியாகவும் ஆய்வுகளை வேண்டி நிற்கும் பகுதியாகவும் உள்ளது. 2008ம் ஆண்டு முற்பகுதியில் சர்வதேச விஞ்ஞானிகள் கழகம் சமர்ப்பித்த இரண்டாவது கட்ட DNA மரபணு அட்டவணையில் மனிதர்களின் மரபணு ஒன்றில் 99 வீதமானவை மனிதர்களிடையே பொதுவாகவே காணப்படுவதாகவும் மீதி ஒரு வீதமே ஆளாளுக்கு வேறுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்னும் பெரும் பகுதி உயிரணு ஆய்வில் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது.
இக்கலங்களின் சிக்கலான அமைப்பு குறித்து விளக்கும் ப்லோபெல் (Blobel, The Nobel Prize in Physiology or Medicine 1999)
இவ்வுயிரணுக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் நாம் இல்லை எனும் போது எமது அறிவின் சிறுமை எம்மை வியக்கவைக்கிறது. முழுக்கலம் பற்றி அறிய நாம் மிக மிக நீண்ட காலத்தை எடுக்க வேண்டி வரும் என குறிப்பிடுகிறார்.
இவ்வாறே அனைத்து உயிரியல் பேராசிரியர்களினால் மதிக்கப்படுபவரும், "DNA யின் அமைப்பு இரட்டைச் சங்கிலியுருவுடையது" என்பதை எடுத்துக்காட்டியாவருமான (James Dewey Watson) கூறும் போது
இவ்வளவு பிரமாண்ட வளர்ச்சியுடன் நாம் நமது அதி திறமை வாய்ந்த விஞ்ஞானிகளினதும் தரமானதும் மிக மிக நுணுக்கமானதுமான கருக்களினதும் உதவியைக்கொண்டு ஆய்ந்தும்கூட கல உயிரியலின் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றோம் என கூறுவதற்கு நான் தயங்கவில்லை..
இவ்வாறான சிக்கல் வாய்ந்த இக்கல அமைப்பினையும் அதனுள் இடம் பெறும் பரிமாற்றங்களை ஆராயும் நோக்குடனும் 20 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களையும் ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களையும் உள்ளடக்கி 2000 ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட அமைப்பே AfCS (The Alliance for Cellular Signaling) ஆகும். அடுத்தடுத்த கட்டங்களில் இவ்வமைப்பு கலத்தின் தகவல் வங்கிகள், களஞ்சிய சாலைகள் அடுக்கடுக்கான பாதைகள் இலட்சக்கணக்கான தொழில்களை செய்யும் தனித்தனி பகுதிகள் என்பதையும் ஆய்வு செய்யவுள்ளது.

செயற்கைமுறை உயிரணு வளர்ப்பு

ஒரு உயிர்க்கலத்தை வளர்ப்பூடகங்களில் (Growth media or Cell culture media) வளர்ப்பதன் மூலம் அக்கலத்தில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்க முடியும் என்ற அடிப்படையிலேயே இழைய வளர்ப்பு (Tissue Culture) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் வெற்றியை தொடர்ந்து மேலும் நவீன உத்திகளையும் கொண்டு உயிரணு வளர்ப்பு (Cell Culture) முறை சாத்தியமாகி வெற்றியடைந்தது. இவ்வெற்றியே அடுத்த படியெடுப்பு (Cloning) என்ற கிளை வளர்ச்சிக்கு வித்திட்டது. படியெடுப்பு பற்றிய ஆய்வின் அடுத்தப்படியாகவே இன்றைய குருத்தணு ஆய்வு (Stem Cell Research) நோக்கப்படுகிறது

காட்சியகம்