அனி மாதி சித்திகளானவை கூறில்அணுவில் அணுவின் பெருமையின் நேர்மைஇணுகாத வேகார் பரகாய மேவல்அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே |
திருமூலர்--திருமந்திரம்-668வது பாடல்
அட்டமா சித்திகள் விளக்கம்
- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
- மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
- கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
- பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
- பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
- ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.
பாடல் பொருள் நோக்கு
அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
- அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
- சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
- பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
- வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.
Good
ReplyDelete